புறவழி சாலையிலே, அழகிய காலையிலே !
அலுவலகப் பேரூந்துகள் முந்தும் வேளையிலே!
அறவழி சொல்லி அடங்கு என்ற என் மனம் .
மறுவழி இன்றி உன்னை கண்தேடுது மறுகனம் !
ஐம்பது பேர் கொண்ட இருக்கையடி முதலில்
காண்பது உன் இரு கையடி !
பாதி சன்னலை திறந்தாயே என்
மீதி இன்னலை துறந்தேனே !
மதி முகம் காட்டினாயே என்
நிம்மதி கொஞ்சம் கூட்டினாயே !
சிறு நகை செய்தாயோ ?
சித்திரவதை செய்தாயோ ?
மறுமுறை வேண்டினேன் சோகமாக!
மறைந்தாயே பேரூந்தில் வேகமாக!
-Siva
இது என் வாழ்நாளில் மறக்க முடியாத காதல் கவிதை.இதை என் அலுவலக பேரூந்தும் என் மனைவியின் அலுவலக பேரூந்தும் சென்னை புறவழி சாலையில் முந்தி கொள்ளும்போது இயற்றியது .நாங்கள் இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் பணியாற்றினோம் .திருமணத்திற்கு முன்பு எங்களின் சந்திப்பு இதுப்போல் தொடங்கியது .
அலுவலகப் பேரூந்துகள் முந்தும் வேளையிலே!
அறவழி சொல்லி அடங்கு என்ற என் மனம் .
மறுவழி இன்றி உன்னை கண்தேடுது மறுகனம் !
ஐம்பது பேர் கொண்ட இருக்கையடி முதலில்
காண்பது உன் இரு கையடி !
பாதி சன்னலை திறந்தாயே என்
மீதி இன்னலை துறந்தேனே !
மதி முகம் காட்டினாயே என்
நிம்மதி கொஞ்சம் கூட்டினாயே !
சிறு நகை செய்தாயோ ?
சித்திரவதை செய்தாயோ ?
மறுமுறை வேண்டினேன் சோகமாக!
மறைந்தாயே பேரூந்தில் வேகமாக!
-Siva
இது என் வாழ்நாளில் மறக்க முடியாத காதல் கவிதை.இதை என் அலுவலக பேரூந்தும் என் மனைவியின் அலுவலக பேரூந்தும் சென்னை புறவழி சாலையில் முந்தி கொள்ளும்போது இயற்றியது .நாங்கள் இருவரும் வெவ்வேறு அலுவலகத்தில் பணியாற்றினோம் .திருமணத்திற்கு முன்பு எங்களின் சந்திப்பு இதுப்போல் தொடங்கியது .
No comments:
Post a Comment