பணம் பணம் என்றொரு பயணம்,
கனம் கனமா இங்கு போகிறதே!
மனம் மனம் அதை மதிக்காமல்
இனம் மனிதயினம் செல்கிறதே!
தினம் தினம் இந்த போதயில்,
ரனம் ரனம் சென்ற பாதையில்,
பிணம் பிணமாய் இங்கு குவிகிறதே !
அதிகாரம் எனும் ஆயுதத்தால்,
அனுதினமும் அடக்கி வைத்து ,
சதிகார ஆட்டம் ஒன்னு போட்டீங்க!
விதி வசம் மாட்டிகிட்டு,
சவ ஊர்வலம் ஏறுகிட்டு,
சத்தமின்றி உறங்கும்போது ,
ஆட்டம்போட்டு உங்களை
மண்ணுக்குள் அடக்கிவைப்பேங்க!
பதினாரும் பெற்று ,
பெருவாழ்வு வாழ்ந்தீங்க !
திதி நாளு முடிஞ்சபின்னே,
கதி யாரு உங்களுக்கு ?
நதியோடு சாம்பல் போனப்பின்னே,
நாங்க தானே காவலுக்கு!
வெட்டியான் சொல்றேன்
கெட்டியா கேளுங்க,
இறந்த தேதி ஒன்றென்றால்,
கல்லறையிலே உங்க பெயரிருக்கும் .
நீங்க இரந்த தேதி பலவென்றால் (தானம்)
வரலாற்றிலும் உங்க வாழ்விருக்கும் !
-Siva
No comments:
Post a Comment