தனக்கு கொடுத்த மிட்டாயை
தாராள மனம் கொண்டு,
"ஆ" திற என்று சொல்லி,
அன்பாய் வாயில் ஊட்டுவாள்!
குளிரும் தேகம் என்றெண்ணி
குளித்து நான் முடித்ததும் ,
குடு,குடுவென ஓடி வந்து,
குட்டி துண்டை முன்னே நீட்டுவாள் !
பேச வாய் திறக்கும் முன்னே
பாசம் பேச நினைக்கிறதே,
பிஞ்சு தளிர் சிந்திய துளி நீர்,
நெஞ்சம் முழுக்க நனைகிறதே!
-Siva
No comments:
Post a Comment